ActionFraud - National Fraud & Cyber Crime Reporting Centre - Call 0300 123 2040

Tamil

Tamil

எந்தவொரு மோசடியாயினும் 'ஆக்ஷன் ஃப்ராட்'க்குத் தெரியப்படுத்தவும்

நீங்கள் மோடியால் பாதிக்கப்பட்டிருந்தால், யுனைடெட் கிங்டத்தின் மோசடிகளைப் புகாரளிக்கும் மையமான 'ஆக்ஷன் ஃப்ராட்'யிடம் நீங்கள் கூறலாம். நீங்கள் யுனைடெட் கிங்டத்தில் இருந்தால், யுனைடெட் கிங்டத்தில் நடைபெற்ற அல்லது யுனைடெட் கிங்டத்தோடு சம்பந்தப்பட்டிருந்து, கணினி வழியே நடந்த எந்த மோசடியையும் நீங்கள் 'ஆக்ஷன் ஃப்ராட்'டிற்கு புகார் செய்யலாம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசாதவராக இருந்தால் அல்லது ஆங்கிலம் உங்களுடைய தாய்மொழி அல்ல எனில், உங்களுடைய மொழியிலேயே மோசடி குறித்து தெரிவிக்கிற வாய்ப்பு ஒன்றை உங்களுக்கு தருகிற சேவை எங்களிடம் உள்ளது.

  • தொலைபேசி +44 300 123 2040.
  • ஆங்கிலத்தில் பேசுகிற ஒருவரால் உங்களுடைய அழைப்பு பதிலளிக்கப்படும். அவர்களிடம் நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பதைக் கூற வேண்டியிருக்கும்.
  • பிறகு மொழிபெயர்ப்பாளர் அழைக்கப்படும் வரை, நீங்கள் சற்று நேரம் காத்திருக்கும்படி கூறப்படுவீர்கள். இதற்கு சில நிமிடங்கள் ஆகும் எனவே, தயவுசெய்து தொலைபேசியை வைத்துவிடாதீர்கள். எங்களிடம் மொழிபெயர்ப்பாளரின் சேவை உடனடியாக இல்லை எனில், நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள் மேலும் மொழிபெயர்ப்பாளர் கிடைத்தவுடன் உங்களை மீண்டும் ஒருவர் தொலைபேசியில் அழைப்பார்.
  • மொழிபெயர்ப்பாளர் உங்களிடம் பேசுகையில், அவர் மோசடி குறித்தப் புகாரைத் தயாரிக்கும்பொருட்டு உங்களை சில கேள்விகளுக்கான பதில்களை கூறுமாறு கேட்பார். மோசடி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால், நீங்கள் அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் அளிக்கும்படியாக அவற்றை தயாராக கையில் வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இணைப்புகள் திறந்திருக்கும் நேரம்:
திங்கள் - வெள்ளி: காலை 8 மணி முதல் இரவு 8

தொலைபேசி: +44 300 123 2040. டெக்ஸ்ஃபோன்: +44 300 123 2050.

Related articles